சி.பி.எஸ்.இ. நடத்திய நீட் தேர்வில் கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.
இந்தப் பள்ளியைச் சேர்ந்த மாணவி ஓவியா 720}க்கு 442 மதிப்பெண்களும், மாணவர் கரன்ராஜ் 370 மதிப்பெண்களும், மாணவி நித்யா ஸ்ரீ 320 மதிப்பெண்களும் பெற்றனர். மேலும், கார்த்திகா, கௌதம், கணபதி, பிரியதர்ஷினி ஆகிய மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர்.
சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் நிறுவனர் மணி, தாளாளர் கிருஷ்ணவேணி மணி, நிர்வாக இயக்குநர் சந்தோஷ், முதல்வர் தமிழரசன், துணை முதல்வர் விஜயகுமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பாராட்டினர்.