பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழிகாட்டல், ஆலோசனை

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழிகாட்டல் மற்றும் ஆலோசனை வழங்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழிகாட்டல் மற்றும் ஆலோசனை வழங்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தின் மூலம் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு அடுத்து என்ன படிப்பது, உயர்கல்வி குறித்த தகவல்கள், மேற்படிப்புகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பன உள்ளிட்ட தொழில்நெறி வழிகாட்டல் மற்றும் தனிநபர் ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகள் மே 31-ஆம் தேதி வரை அனைத்து வேலை நாள்களிலும் கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்கப்படும். இதில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர் தங்களது பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் நகலுடன் கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி பயனடையுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com