கிருஷ்ணகிரியில் தமிழக அணிக்கான விளையாட்டுத் தேர்வுப் போட்டி

கிருஷ்ணகிரியில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில், தமிழக அணிக்கான விளையாட்டு தேர்வுப் போட்டிகள் புதன்கிழமை தொடங்கின.

கிருஷ்ணகிரியில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில், தமிழக அணிக்கான விளையாட்டு தேர்வுப் போட்டிகள் புதன்கிழமை தொடங்கின.
கிருஷ்ணகிரியில் உள்ள பாரத் இண்டர் நேஷனல் பள்ளி வளாகத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி தொடங்கி வைத்தார். பாரத் இண்டர் நேஷனல் பள்ளியின் நிறுவனர் மணி தலைமை வகித்தார். தாளாளர் கிருஷ்ணவேணி, முதல்வர் சுவாமி ரெட்டி, உடல்கல்வி ஆய்வாளர் வளர்மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
போட்டியில் மாநிலத்திலிருந்து பல்வேறு பள்ளிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். கால்பந்து, டென்னிஸ் மற்றும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் சிறந்த வீரர்கள் தமிழக அணிக்காக தேர்வு செய்யப்படுகின்றனர். தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவியர் அடுத்தாண்டு ஜனவரி முதல் வாரத்தில் புதுதில்லியில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com