கிருஷ்ணகிரி நாளந்தா சர்வதேச பொதுப் பள்ளியில், சிறப்பு திறமைகள் வெளிப்படுத்தும் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பள்ளி மாணவ, மாணவியர் பாரத நாட்டியம், வாய்ப்பாட்டு, சிலம்பம், ரோபோட்டிக்ஸ் போன்ற கலைகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
பள்ளியின் நிறுவனர் கொங்கரசன், தாளாளர் சாமுண்டீஸ்வரி கொங்கரசன், நிர்வாக இயக்குநர்கள் கௌதமன், புவியரசன், முதல்வர் உமா ஜெகதீஸ்வரன் உள்ளிட்டோர் மாணவ, மாணவியரை பாராட்டினர். இந்த நிகழ்வில் பள்ளி மாணவ, மாணவியர், பெற்றோர் பங்கேற்றனர்.