ராயக்கோட்டையில் பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ராயக்கோட்டை உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் மற்றும் போலீஸார் ராயக்கோட்டை நகரப் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, ராயக்கோட்டை ரயில் நிலையம் பின்புறம் உள்ள புளிய மரத்தடியில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த ராயக்கோட்டையைச் சேர்ந்த சுப்பிரமணி (32), சரவணன் (38), எல்லப்பன் (40), நாகராஜ் (37) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.