ஒசூர் பேருந்து நிலையக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஆய்வு
செய்தனர்.
ஒசூர் பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு கடையில், கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த இனிப்புகளை எலி சாப்பிடுவது போன்ற விடியோ காட்சி கட்செவி அஞ்சலில் பரவியது. இதைப் பார்த்த நகராட்சி நிர்வாகம், சம்பந்தப்பட்ட கடைக்கு ரூ.2,000 அபராதம் விதித்தது. உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடையை மூடி சீல் வைத்தனர். இந்நிலையில் கடைகளில், உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமையிலான அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது தரமில்லாதஇனிப்புகள், 300 சிப்ஸ் பாக்கெட்டுகள், முன்தேதியிட்டு விற்பனைக்கு வந்த தண்ணீர் பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.