ஒசூரில் கடலை மிட்டாய் பாக்கெட்டியில் கரப்பான்பூச்சி இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார்.
ஒசூர் பாகலூர் சாலை பஸ்தி பகுதியைச் சேர்ந்தவர் நாதன். இவர் புதன்கிழமை மாலை பாகலூர் சாலையில் உள்ள ஒரு கடையில் கடலை மிட்டாய் பாக்கெட் வாங்கினார்.
அப்போது, கடலை மிட்டாயின் மீது ஏதோ பூச்சி இருப்பது போன்று தெரிந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அவர், பாக்கெட்டை பிரித்துப் பார்த்தபோது, பாக்கெட்டில் கரப்பான் பூச்சி இறந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. இது குறித்து வாடிக்கையாளர் நாதன், சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளரிடம் புகார் செய்தார். இதையடுத்து, கரப்பான்பூச்சி இருந்த பாக்கெட்டை பெற்றுக் கொண்டு, அதற்கு பதிலாக மாற்றுப் பொருளை கடைக்காரர் அளித்தார்.
கரப்பான்பூச்சி இருந்த கடலை மிட்டாய் பாக்கெட், மதுரையில் தயாரிக்கப்பட்டு ஒசூருக்கு விற்பனைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.