காந்தி பிறந்த நாள் போட்டி: வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு

கிருஷ்ணகிரி மாவட்ட நேரு இளையோர் மையம் சார்பில் நடைபெற்ற காந்தி பிறந்தநாள் போட்டியில், வெற்றிபெற்றவர்களுக்கு அண்மையில் பரிசளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட நேரு இளையோர் மையம் சார்பில் நடைபெற்ற காந்தி பிறந்தநாள் போட்டியில், வெற்றிபெற்றவர்களுக்கு அண்மையில் பரிசளிக்கப்பட்டது.
 காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், திம்மாபுரம் ஊராட்சி மன்ற வளாகத்தில் நடைபெற்ற காந்தி பிறந்த நாள் விழாவையொட்டி கட்டுரை, பேச்சு, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றிபெற்றவர்களுக்கு நேரு இளையோர் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் திருநீலகண்டன் பரிசு, சான்றிதழ்களை வழங்கினார்.
 திம்மாபுரம் சுவாமி விவேகானந்தா இளைஞர் மன்றத் தலைவர் பூவரசன், கௌரவத் தலைவர் அருள், தேசிய சேவைத் தொண்டர் பூங்கொடி, தேசிய இளைஞர் தொண்டர் முத்துலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com