ஒசூர் ஐடி பார்க் எல்காட் அலுவலகம்: முதல்வர் திறந்து வைத்தார்

ரூ. 22 கோடி நிதியில் கட்டி முடிக்கப்பட்ட ஒசூர் ஐடி பார்க் கட்டடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தார்.

ரூ. 22 கோடி நிதியில் கட்டி முடிக்கப்பட்ட ஒசூர் ஐடி பார்க் கட்டடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தார்.
ஒசூர் பாகலூர் சாலை விஸ்வநாதபுரம் கிராமத்தில் ரூ. 22 கோடி நிதியில் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் எல்காட் நிர்வாக அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.
இந்த அலுவலகத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் சென்னையில் இருந்தபடி திறந்து வைத்தார். இதையேற்று ஒசூர்  ஐடி பார்க் எல்காட் அலுவலகத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர். ஒசூர் நகர அதிமுக செயலாளர் நாராயணன், மாவட்ட பொருளாளர் நாராயணன், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெ.பி (எ) ஜெயப்பிரகாஷ், தவமணி, முத்துராஜ், வாசுதேவன், ஒன்றியச் செயலாளர் கே.டி.ஜெயராமன், ஒன்றியப் பொருளாளர் சிட்டி ஜெகதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com