கிருஷ்ணகிரி அணையின் நீர் திறப்பு புதன்கிழமை வினாடிக்கு 4,935 கன அடியாக
அதிகரிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வழியாக பாயும் தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவாதால் கிருஷ்ணகிரி அணை முழு கொள்ளவை எட்டியது. அணையின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையிலிருந்து உபரி நீர் தென்பெண்ணை ஆற்றிலில் திறந்து விடப்படுகிறது.
இந்த நிலையில், புதன்கிழமை காலை 7 மணி அளவில் நீர் வரத்தானது வினாடிக்கு நீர் வரத்து 3,718 கன அடியாக இருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 3,145 கன அடி வெளியேற்றப்பட்டது. நீர் மட்டம் 51.10 அடியாக இருந்தது. இத்தகைய நிலையில், அணையின் நீர் வரத்து படிப்படியாக உயர்ந்தது. மாலை 4 மணி நிலவரப்படி அணையின் நீர்வரத்து வினாடிக்கு 3,900 கன அடியாக உயர்ந்தது. நீர் வெளியேற்றம் வினாடிக்கு 4,935 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.