கிருஷ்ணகிரி அணையின் நீர்வரத்து விநாடிக்கு 1,497 கன அடியாக குறைந்தது

கிருஷ்ணகிரி அணையின் நீர்வரத்து விநாடிக்கு 1,497 கன அடியாக வியாழக்கிழமை குறைந்தது.

கிருஷ்ணகிரி அணையின் நீர்வரத்து விநாடிக்கு 1,497 கன அடியாக வியாழக்கிழமை குறைந்தது.
கர்நாடகம், ஆந்திர மாநிலங்களிலும்,  கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதன் எதிரொலியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வழியாக பாயும் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக உயர்ந்தது.
இதனால், கிருஷ்ணகிரி அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணகிரி அணை முழு கொள்ளவை எட்டியது. இதையடுத்து, அணையிலிருந்து உபரி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி அணையிலிருந்து கடந்த இரு நாள்களுக்கு முன் அதிகபட்சமாக விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக மழை பெய்யவில்லை. இதனால், அணையின் நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. கிருஷ்ணகிரி அணையின் நீர்வரத்தானது வியாழக்கிழமை காலை 7 மணிக்கு விநாடிக்கு 2,349 கன அடியாகவும், நீர் வெளியேற்றானது விநாடிக்கு 1,856 கன அடியாகவும் இருந்தது.
அதேபோல், மாலை 4 மணி அளவில் நீர்வரத்தானது விநாடிக்கு 2,220 கன அடியாகவும், வெளியேற்றானது விநாடிக்கு 1,497 கன அடியாகவும் குறைந்தது. நீர்வரத்தும், வெளியேற்றமும் குறைந்த நிலையில், அணையின் நீர் இருப்பானது 50.40 அடியிலிருந்து, 50.60 அடியாக உயர்ந்தது. அணையின் மொத்த நீர்மட்டம் 52 அடி ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com