சூளகிரி அருகே 4 யானைகள் முகாமிட்டுள்ளதால் விவசாயிகளுக்கு வனத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கர்நாடக மாநிலம், பன்னர்கட்ட வனப் பகுதியில் இருந்து தேன்கனிக்கோட்டை வனப் பகுதி வழியாக வந்த 4 யானைகள் சூளகிரி அருகே போடூர்பள்ளம் கிராமத்திற்குள் வெள்ளிக்கிழமை இரவு நுழைந்தது.
இதனால், இரவு நேரங்களில் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என ஒசூர் கோட்ட வனத் துறையினர் எச்சரித்துள்ளனர். யானைகளை விரட்டும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்