கிருஷ்ணகிரி
நண்பரை கத்தியால் குத்தியவர் கைது
பாகலூரில் நண்பரை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.பாகலூர் அருகே பெலத்தூர் கோபனப்பள்ளியைச் சேர்ந்தவர் ராஜப்பா ( 40),
பாகலூரில் நண்பரை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.
பாகலூர் அருகே பெலத்தூர் கோபனப்பள்ளியைச் சேர்ந்தவர் ராஜப்பா ( 40), தொழிலாளி. சூடாபுரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (60). இவர்கள் 2 பேரும் நண்பர்கள். இந்த நிலையில், மர்ம நபர்கள் சிலர் செல்வராஜின் வீட்டில் இருந்த துணிகளை திருடிச் சென்றனராம். இது தொடர்பாக நண்பர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் செல்வராஜ் தான் வைத்திருந்த கத்தியால் ராஜப்பாவை குத்தினாராம். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தாராம். இதுகுறித்து ராஜப்பா பாகலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து செல்வராஜை கைது செய்தனர்.