கெலமங்கலம் அருகே லாரிகளில் டீசல் திருடியதாக 2 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
கெலமங்கலம் அருகே உள்ள பி.அக்ரஹாரம் பகுதியில் நின்றிருந்த லாரிகளில் 2 பேர் டீசல் திருடினராம். அப்போது, அங்கிருந்த ஓட்டுநர் மாதேஷ் (32). அவர்களைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
கெலமங்கலம் போலீஸார் நடத்திய விசாரணையில் அவர்கள் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள காமையூரைச் சேர்ந்த வெங்கடேஷ் (28), மூர்த்தி (18) என்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 50 லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டது.