கிருஷ்ணகிரி மின்கோட்டத்துக்கு உள்பட்ட அகசிப்பள்ளி பீடரில் வளர்ச்சிப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (பிப்.14) கீழ்கண்ட பகுதிகளில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது என மின் கோட்ட செயற்பொறியாளர் எஸ்.கோவிந்தராஜூ, செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.
மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: மருதேப்பள்ளி, கணவாய்ப்பட்டி, மேலேரிக்கொட்டாய், மங்கம்மாபுரம், தண்ணீர்பள்ளம், நாமகாரன்கொட்டாய், பெத்தனப்பள்ளி, வேட்டியம்பட்டி, சவுளூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.