கிருஷ்ணகிரியில் எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி, மிதிவண்டி விழிப்புணர்வு ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது .
பாரத் பெட்ரோலியம் நிறுவனம், கார்த்திக் கேஸ் ஏஜென்ஸி முகவர் இணைந்து நடத்திய எரிபொருள் சிக்கனம் குறித்த மிதிவண்டி விழிப்புணர்வு ஊர்வலம், கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகே தொடங்கியது. இந்த ஊர்வலத்தை, பாரத் பெட்ரோலிய நிறுவன முதுநிலை விற்பனை மேலாளர் சோனாவானே கிரிஷ், சில்லறை விற்பனை மேலாளர் வெங்கலவாப் விவேக் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கார்த்திக் கேஸ் ஏஜென்ஸி உரிமையாளர் குமரேசன் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி நகரில் டி.பி.சாலை, காந்தி சாலை வழியாகச் சென்ற இந்த ஊர்வலம், வட்டச் சாலை அருகே நிறைவு பெற்றது. இதில் பங்கேற்றோர் எரிபொருள் சிக்கனம், எரிபொருள் சேமிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர்.