அதிக மாத்திரைகளை சாப்பிட்ட மாணவர் சாவு

அஞ்செட்டி அருகே உடல்நலம் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டதால் உயிரிழந்தார்.

அஞ்செட்டி அருகே உடல்நலம் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டதால் உயிரிழந்தார்.
அஞ்செட்டி அருகே உள்ள பனை ஒசதொட்டியைச் சேர்ந்தவர் திம்மராயன். இவரது மகன் பரத் (16) அஞ்செட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர்,  அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. மயக்கமடைந்த மாணவர் அஞ்செட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். பின்னர், தருமபுரி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். 
அங்கு, அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அஞ்செட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com