கிருஷ்ணகிரி
உத்தனப்பள்ளியில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு
உத்தனப்பள்ளி அருகே நிலத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
உத்தனப்பள்ளி அருகே நிலத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
உத்தனப்பள்ளி அருகே உள்ள கீரனப்பள்ளியில் சுந்தரேசன் என்பவரது நிலத்தில் சனிக்கிழமை குழித் தோண்டிய போது அதில் 2 அடி உயரம் கொண்ட அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்து அங்குச் சென்ற வருவாய்த் துறையினர் அம்மன் சிலையை மீட்டு சூளகிரி வட்டாட்சியர் பெருமாளிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து, அந்தச் சிலை கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது.