பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற பர்கூர் வேளாங்கண்ணி பள்ளி மாணவர்களை மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை பாராட்டினார்.
2017- 2018 கல்வி ஆண்டில் பர்கூர் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் நூறு சதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை பாராட்டி பரிசுகளை வழங்கினார்.
அப்போது, எம்எல்ஏ சி.வி.ராஜேந்திரன், பள்ளி தாளாளர் சிவராஜ், மேலாளர் சி.கூத்தரசன், முதல்வர் மெரினா பலராமன், பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் கிருஷ்ணன், பொறியாளர் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.