கிருஷ்ணகிரியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரியில் நவ. 16-ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

கிருஷ்ணகிரியில் நவ. 16-ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கௌரிசங்கர், புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நவ.16-ஆம் தேதி காலை 10 மணியளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்தத் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் ஒசூர், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்கள் நிறுவனத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு ஆள்களைத் தேர்வு செய்ய உள்ளன. முகாமில் 10, 12 ஆகிய வகுப்புகள், ஐடிஐ, பட்டயம், பட்டதாரிகள், 21 முதல் 35 வயதுக்குள்பட்டவர்கள் பங்கேற்கலாம். இதில் பங்கேற்க விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் தங்களுடைய அனைத்து கல்விச் சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் சுய விவரப் படிவத்துடன் நேரில் வந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நேர்காணலில் பங்கேற்று பயன் பெறலாம் என அதில் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com