ஒசூரை அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.
ஒசூர் அருகே உள்ள ஜீ மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் சின்ன எல்லப்பா(55), சாதப்பா(65), கூப்பலியப்பா(50) ஆகிய மூவரும் இரு சக்கர வாகனத்தில், ஜீ மங்கலத்திலிருந்து பாகலூர் நோக்கி, வெள்ளிக்கிழமை இரவு சென்றனர்.
பாகலூர் அருகே சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த லாரி மோதியது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேரும் பலத்த காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஒசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், சின்ன எல்லப்பா, சாதப்பா ஆகிய இருவரும் வழியிலே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து பாகலூர் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.