ரூ.9.90 லட்சம் மதிப்பிலான புகையிலை பறிமுதல்: ஓட்டுநர் கைது

கிருஷ்ணகிரி அருகே காரில் கடத்தி சென்ற ரூ.9.90 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை சனிக்கிழமை பறிமுதல் செய்த


கிருஷ்ணகிரி அருகே காரில் கடத்தி சென்ற ரூ.9.90 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை சனிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸார் ஓட்டுநரைக் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். குருபரஅள்ளி காவல் நிலையத்துக்குள்பட்ட சோமநாதபுரம் அருகே சந்தேகத்து இடமளிக்கும் வகையில் ஒரு வாகனம் நிற்பதை கண்ட நெடுஞ்சாலை கண்காணிப்பு போலீஸார், அதன் ஓட்டுநரிடம் விசாரணை செய்தனர்.
மேலும், வாகனத்தை சோதனை செய்ததில் அதில் ரூ.9.90 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, வாகனத்துடன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை பறிமுதல் செய்த போலீஸார் ஓட்டுநரான சேலம் ஆண்டிப்பட்டி ஏரி பகுதியைச் சேர்ந்த விவேக்(23) என்பவரைக் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com