பென்னாகரம் வட்ட ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்க பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பென்னாகரம் டிடி 188 வட்ட அரசு மேல்நிலை மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத்தின் பேரவை கூட்டத்துக்கு சங்கத் தலைவர் முனியப்பன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் லட்சுமணன், ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்துக்கு சங்கத்தின் செயலாளர் மோகன்ராஜ் உறுப்பினர்களின் முன்னிலையில் ஆண்டறிக்கை வாசித்தார்.தொடர்ந்து லாபத் தொகையான ரூ.14 லட்சம் உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இதில் பென்னாகரம் உயர்நிலை,மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். லெனின் நன்றி தெரிவித்தார்.
சிட்லிங்கில் அக்.24-இல்
மக்கள் தொடர்பு திட்ட முகாம்
அரூர், அக். 21 : சிட்லிங் மலை கிராமத்தில் புதன்கிழமை (அக். 24) மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறுகிறது.
அரூர் வட்டம், சிட்லிங்கில் நடைபெறும் இந்த முகாமில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி
தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார். இந்த முகாமில், தருமபுரி மாவட்டத்தின் அனைத்து அரசுத் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
எனவே, சிட்லிங் ஊராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களின் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.