கிருஷ்ணகிரியில் திருமலா பல்பொருள் அங்காடி திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி பெங்களூரு சாலையில் அமைந்துள்ள திருமலா பல்பொருள் அங்காடியை தொழிலதிபர்கள் எச்.எம்.கிருபாகர், ஜெயந்தி கிருபாகர் ஆகியோர் குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தனர்.
இந்த அங்காடியில் அனைத்து விதமான மளிகை பொருள்கள், இனிப்பு வகைகள், பரிசுப் பொருள்கள், அழகு சாதனப் பொருள்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்கள், முன்னணி நிறுவனங்களின் செல்லிடப்பேசிகள் விற்பனைக்கு உள்ளன. தவணை முறையும் உண்டு.
திறப்பு விழாவையொட்டி அக்.23-ஆம் தேதி வரையில் செல்லிடப்பேசி வாங்குவோருக்கு சிறப்பு பரிசு பொருள் வழங்கப்படும் என அதன் உரிமையாளர் ஆர்.லோகநாதன் தெரிவித்தார்.
விழாவை உரிமையாளர்கள் ஆர்.அங்கம்மாள் ரங்கசாமி நாயுடு, மகேஸ்வரி லோகநாதன், எல்.சோமேஸ்வரன், ஆர்.எல்.பேரரசு ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.