ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து செவ்வாய்க்கிழமை நொடிக்கு 7 ஆயிரம் கனஅடியாகக் குறைந்தது.
கர்நாடக அணைகளிலிருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. இந்த நிலையில் ஒகேனக்கல்லுக்கு திங்கள்கிழமை மாலை 5மணி நிலவரப்படி நொடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக இருந்துவந்த நீர்வரத்து ,செவ்வாய்கிழமை காலை 9 மணி நிலவரப்படி நொடிக்கு 7 ஆயிரம் கனஅடியாகக் குறைந்தது. மேலும், ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிப்பதற்கு 62-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தடை நீட்டிக்கப்பட்டிருந்தது.