ஊத்தங்கரையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு கிழக்கு மாவட்டச் செயலாளர் நா.கோ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.முன்னதாக ஒன்றியச் செயலாளர் எஸ்.சிவமணி வரவேற்றார். மத்தூர் ஒன்றியச் செயலாளர் ச.கணேஷகுமார், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜெ.சிவக்குமார், வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.எ.அருணகிரி, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் சி.நரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தலைமை நிலையச் செயலாளர் மற்றும் மண்டல பொருளாளர் பி.பழனியப்பன், வழக்குரைஞர் பிரிவு துணைச் செயலாளர் பி.ஆர்.அசோக்குமார், தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் ஆர்.பாலு, கழக பேச்சாளர் எரியீட்டி ஏழுமலை ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நகரச் செயலாளர் வி.சுரேஷ் நன்றி கூறினார்.