சேலம் ரயில்வே கோட்ட வருவாய் 4.9 சதவீதம் அதிகரித்து ரூ.635 கோடியாக உயர்வு : கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா

சேலம் ரயில்வே கோட்டத்தின் மொத்த வருவாய் கடந்த ஆண்டை விட 4.9 சதவீதம் அதிகரித்து ரூ.635.7 கோடியாக உயர்ந்துள்ளது என கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா தெரிவித்தார்.

சேலம் ரயில்வே கோட்டத்தின் மொத்த வருவாய் கடந்த ஆண்டை விட 4.9 சதவீதம் அதிகரித்து ரூ.635.7 கோடியாக உயர்ந்துள்ளது என கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா தெரிவித்தார்.
தெற்கு ரயில்வே சேலம் கோட்டத்தில் 62}ஆவது ரயில்வே வார விழா சேலம் கோட்ட அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
1853}ஆம் ஆண்டில் இந்தியாவில் ரயில் சேவை முதன் முறையாக துவங்கப்பட்டதை நினைவு கூரும் வகையில் இவ்விழா நாடெங்கிலும் இந்திய ரயில்வேயால் கொண்டாடப்படுகிறது.
விழாவில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா, சிறப்பாக பராமரிக்கப்பட்ட ரயில்நிலையங்கள் மற்றும் பாதுகாப்பான ரயில் தடப்பகுதி போன்றவற்றுக்காக 14 சுழற்கேடயங்களை சம்பந்தப்பட்ட ரயில்நிலைய மேலாளர்களுக்கு வழங்கினார்.
சிறப்பாக பராமரிக்கப்பட்ட பெரிய ரயில் நிலையத்துக்கான கேடயத்தை கோவை ரயில் நிலைய மேலாளர் சின்னராஜ், சிறப்பாக பராமரிக்கப்பட்ட சிறிய ரயில் நிலையத்திற்கான கேடயத்தை விருத்தாசலம் அடுத்துள்ள புக்கிரவாரி ரயில் நிலைய மேலாளர் ராஜசேகர் ஆகியோர் பெற்று கொண்டனர்.
இது தவிர 20 அதிகாரிகள் உள்பட 402 சேலம் கோட்ட ஊழியர்களுக்கு கடந்த ஆண்டில் சிறப்பாக பணியாற்றியமைக்கு சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசுகளை சேலம் கோட்ட தெற்கு ரயில்வே மகளிர் நல அமைப்பின் தலைவர் அனிதா வர்மா முன்னிலையில் வழங்கப்பட்டது.
விழாவில் கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா பேசியது:
சேலம் கோட்டம் கடந்த நிதியாண்டில், சிறப்பாகப் பணியாற்றி மேம்பாடு கண்டிருக்கிறது. மொத்த வருவாய் கடந்த ஆண்டை விட 4.9 சதவீதம் அதிகரித்து ரூ.635.7 கோடி ஈட்டியுள்ளது. பயணிகள் வருவாய் ரூ.477.18 கோடியில் இருந்து ரூ.511.23 கோடியாக உயர்ந்து 7.14 சதவீதம் அதிகரித்துள்ளது. பயணச்சீட்டு சோதனை வருவாய் ரூ.4.97 கோடியில் இருந்து ரூ.6,18 கோடியாக 24.55 சதவீதம் அதிகரித்துள்ளது. உணவக வருவாய் ரூ.2.79 கோடியில் இருந்து ரூ.3.14 கோடியாக 12.72 சதவீதம் அதிகரித்துள்ளது.
கோவை, உதகை மற்றும் குன்னூர் ரயில் நிலையங்களில் வைபை வசதி செய்யப்பட்டிருக்கிறது. நிகழாண்டு ஆண்டு இறுதிக்குள் சேலம் ரயில் நிலையத்தில் வைபை வசதி செய்யப்படும்.
இந்திய ரயில்வேயின் பசுமை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கோவை - மாயவரம் ஜனசதாப்தி விரைவு ரயிலில் சூரிய மின்சக்தி பலகைகள் நிறுவப்பட்டு தற்போது சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஊழியர்களின் குறைதீர்க்க அங்கீகரிக்கப்பட்ட அமைப்பான தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் பிரதிநிதிகளுடன் 36 மணி நேரம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட 583 குறைகள் ஒரேநாளில் தீர்க்கப்பட்டது.
ரயில்வே குடியிருப்பில் ஊழியர்களுக்காக புதிய குடியிருப்புகள், மற்றும் திறந்த வெளி விளையாட்டரங்கம் சேலத்தில் கட்டப்பட உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com