தற்கொலைக்கு தூண்டியதாக இளைஞர் மீது வழக்கு

வாழப்பாடி அருகே மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து

வாழப்பாடி அருகே மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, இளைஞர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 வாழப்பாடியை அடுத்த தாண்டானுôர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் (45), அவரது மனைவி ராணி(42), மகள் ஆர்த்தி (19), மகன் நவீன்(17) ஆகியோர் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.
 ராஜேந்திரனின் மூத்த மகள் மோகனா, அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த பெரியகவுண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன் (22) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டதால் அவரது குடும்பத்தினர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது.
 இதையடுத்து விவசாயி ராஜேந்திரனை குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியதாக வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகன் (27) என்ற இளைஞர் மீது ஏத்தாப்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com