மேட்டூரில் அங்கன்வாடி ஊழியர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேட்டூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள்- உதவியாளர்கள் சங்கத்தின் மேட்டூர் வட்டத் தலைவர் எஸ்.பிரேமா தலைமை வகித்தார்.
அரசு ஊழியர்கள் சங்கத்தின் வட்டச் செயலர் சிங்கராயன், சிஐடியூ மாநிலக் குழு உறுப்பினர் வி.இளங்கோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பணி நிரந்தரம், தகுதிக்கு ஏற்ப பதவி உயர்வு, ஊதியக் குழு நிலுவைத்தொகையை வழங்க வேண்டும், மே மாதத்தில் விடுமுறை, காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.