ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளிக் குழந்தைகள் 1,000 பேருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
கெங்கவல்லி வட்டார தலைமை ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் தம்மம்பட்டி நடராஜ் தலைமையில், பனந்தோப்பு, உடையார்பாளையம் தொடக்கப் பள்ளிகளிலும், காந்திநகர், வாழக்கோம்பை, மூக்காகவுண்டன்புதூர் ஆகிய நடுநிலைப் பள்ளிகளிலும்,செந்தாரப்பட்டி ஆர்சி நடுநிலைப் பள்ளியிலும் உள்ள ஆயிரம் மாணவ, மாணவியருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில், மன்ற நிர்வாகிகள் திருச்செல்வன், தனபால், பாலகிருஷ்ணன், மஜார், மணியன், சிற்பி தமிழ்ச்செல்வன், சுகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.