சேலம்
வீட்டில் பதுக்கி வைத்து மதுபானம் விற்ற பெண் கைது
வாழப்பாடி அருகே மதுபானங்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண்ணை வாழப்பாடி போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
வாழப்பாடி அருகே மதுபானங்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண்ணை வாழப்பாடி போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
வாழப்பாடியை அடுத்த பேளூர் பேரூராட்சி சந்தைப்பேட்டை பகுதியில் டாஸ்மாக் மதுபானத்தை வீட்டில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக வாழப்பாடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதனையடுத்து, வாழப்பாடி போலீசார் திங்கள்கிழமை சோதனை நடத்தினர்.
அப்போது, சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் மனைவி பாப்பாத்தி (60), டாஸ்மாக் மதுபானத்தை வாங்கி வீட்டில் வைத்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது. அதனையடுத்து, அவரை கைது செய்த போலீஸார், அவர் வீட்டில் வைத்திருந்த 7 மதுபான புட்டிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.