வாழப்பாடி காமராஜ் நகர், பெரியாற்றங்கரையில் அமைந்துள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோயிலில் வறட்சி நீங்கி மழை பெய்ய வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதில் ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு ஆடு, கோழி பலியிட்டும், அம்மன் கருவறை முழுவதும் தேங்காய், வாழைப்பழம், பச்சரிசி மாவு, வெற்றிலைப்பாக்கு உள்ளிட்ட தாம்பூலத் தட்டுகளை வைத்தும், வறட்சி நீங்கி மழை பெய்ய வேண்டினர். சிறப்புப் பூஜை வழிபாட்டுக்கான ஏற்பாடுகளை பெரியாண்டிச்சி அம்மனை குல தெய்வமாக கொண்ட ஏழு குடும்பப் பங்காளிகள் செய்திருந்தனர்.