தம்மம்பட்டி அருகே வாழக்கோம்பையில் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் வீட்டில் 11 பவுன் நகை திருட்டுப் போனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
வாழக்கோம்பையில் கிராம நிர்வாக அலுவலகம் அருகே வசித்து வருபவர் ராமசாமி. இவர் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர். இவர் வீட்டின் கதவைத் திறந்துவைத்துள்ள
நிலையில் தனது தோட்டத்துக்கு சனிக்கிழமை பகலில் சென்றுள்ளார். இரவில் அவர் வீடு திரும்பியபோது வீட்டின் பீரோவில் இருந்த 11 பவுன் தங்க நகை, ரூ.5 ஆயிரம் ரொக்கம் திருட்டுப் போனது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ராமசாமி, தம்மம்பட்டி காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த தம்மம்பட்டி போலீஸார், சந்தேகத்தின்பேரில் ஒருவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.