தென்னங்குடிபாளையத்தில் ரூ.30 லட்சம் செலவில் அம்மா பூங்கா அமைப்பதற்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவர் ஆர்.இளங்கோவன் பங்கேற்று பூமிபூஜை செய்து பணியைத் தொடக்கி வைத்தார். இப்பூங்கா 30 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்படவுள்ளது. நிகழ்ச்சியில் ஆத்தூர் எம்எல்ஏ ஆர்.எம்.சின்னதம்பி, ஒன்றியச் செயலாளர் சி.ரஞ்சித்குமார், மாவட்ட பிரதிநிதி சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.