சோனா கல்வி குழுமம் சார்பில் மகளிர் தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
சோனா கல்வி குழுமம் சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கல்லூரித் தலைவர் வள்ளியப்பா, சீதா வள்ளியப்பா ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில் கல்லூரி முதல்வர்கள் உஷா, கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் பெங்களூரு எம்.எஸ்.ராமையா தொழில்நுட்பக் கல்லூரியின் வேலைவாய்ப்புத் துறை தலைவர் சவிதா ராணி மற்றும் சென்னை சென்ஷா டெக்னாலஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜலட்சுமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.
இதைத்தொடர்ந்து சீதா வள்ளியப்பா பேசுகையில், அகில இந்திய அளவில் தொழில்நுட்பக் கல்வியை பெண்களும் படிக்கலாம் என்ற வகையில் முதன் முதலாக இருபாலர் தொழில்நுட்பக் கல்வி தியாகராஜர் பல்தொழில்நுட்பக் கல்லூரியில்தான் நடைமுறைப்படுத்தப்பட்டது. மாணவிகளின் திறமைகளை அறிந்து அவர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல சாதனைகளை புரிந்து வருவதற்கு சோனா கல்வி குழுமங்கள் உதவிகரமாக இருக்கின்றன என்றார். விழாவில் கல்லூரி இயக்குநர் கௌசிக், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.