தளவாய்ப்பட்டி அரசுப் பள்ளியில் உலக தண்ணீர் தினம்

தளவாய்ப்பட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

தளவாய்ப்பட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
 சேலம் மாவட்டம், பெத்தநாய்க்கன்பாளையம் வட்டத்துக்கு உள்பட்ட தளவாய்ப்பட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் தலைமையாசிரியை இரா.தனலட்சுமி தலைமையில் கொண்டாடப்பட்டது. ஆசிரியர் பெ.ராஜாங்கம், ஆசிரியைகள் க.ராஜேஸ்வரி மற்றும் மாணவ, மாணவியர் தண்ணீரின் அவசியத்தை உணர்த்தும் வகையில் பதாகைகளை ஏந்தியவாறு ஊராட்சிப் பகுதியைச் சுற்றி வந்தனர். தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும், குழாய்களில் தண்ணீர் வீணாவதைத் தவிர்க்க வேண்டும், நீரை அதிகமாகச் சேமித்து வைக்க வேண்டாம் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com