எடப்பாடி கிழக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கக் கூட்டம் எடப்பாடி கவுண்டம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
எடப்பாடி பகுதியில் ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கிழக்குப் பகுதி உற்பத்தியாளர் சங்கத்தின் புதிய தலைவராக கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த இளங்கோ, செயலராக சி.எஸ்.ராஜி, பொருளாராக ஜெயப் பிரகாஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சங்கத்தின் புதிய தலைவர் இளங்கோ உறுப்பினர்கள் மத்தியில் பேசியது:
எடப்பாடி கிழக்குப் பகுதி ஜவுளி உற்பத்தியாளர்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக திடீர் நூல்விலை உயர்வு உள்ளிட்ட உறுப்பினர்களின் அனைத்துப் பிரச்னைகளையும் சங்கத்தின் மற்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதுடன் அதற்கான நிரந்தர தீர்வையும் பெற்றுத் தர, சங்கத்தின் புதிய நிர்வாகிகள் குழு முனைப்புடன் செயல்படும் என்றார். இந்த நிகழ்சியில் சங்க நிர்வாகிகள் நாகராஜ், லோகநாதன், ஜெமினி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.