இருவேறு விபத்துகளில் இருவர் சாவு

தாரமங்கலம் அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் 2 பேர்உயிரிழந்தனர்.

தாரமங்கலம் அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் 2 பேர்உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம், தாரமங்கலம் கசப்பேரி பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ஏழுமலை (55). இவர், சைக்கிளில் சின்னப்பம்பட்டி பகுதியில் சென்றபோது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்து அதே இடத்தில் உயிரிழந்தார்.
இதேபோன்று, தாரமங்கலம் அருகேயுள்ள லட்சுமாயூர் பகுதியைச் சேர்ந்தவர் தையல் தொழிலாளி சுப்பிரமணி (28). இவர், இருசக்கர வாகனத்தில் வந்தபோது, தனியார் பேருந்து மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த இரு விபத்துகள் குறித்தும், தாரமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com