சங்ககிரியில் ஊஞ்சல் உற்சவம்

சேலம் மாவட்டம், சங்ககிரி அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரைத் தேர்த்திருவிழாவையொட்டி ஊஞ்சல் உற்சவம் கோயில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.

சேலம் மாவட்டம், சங்ககிரி அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரைத் தேர்த்திருவிழாவையொட்டி ஊஞ்சல் உற்சவம் கோயில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
சங்ககிரி அருள்மிகு சென்னகேசவப்பெருமாள் சித்திரைத் தேர்த்திருவிழா மே 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து மலையடிவாரத்தில் உள்ள தங்கு மண்டபத்தில் சுவாமிக்கு தினசரி பகல் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. சுவாமி பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்தார்.
மே 9-ஆம் தேதி திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு கட்டளைதாரர்களின் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 19-ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவு சுவாமிகள் ஊஞ்சல் உற்சவத்தில் எழுந்தருளினார்.
ஊஞ்சல் உற்சவத்தையொட்டி ராமபிரான், வெங்கடாசலபதி குறித்து பாடல்களை இசையுடன் பாடினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். மே 20-ஆம் தேதி சனிக்கிழமை காலையில் சுவாமி திருமலைக்கு எழுந்தருளுகிறார். இதையொட்டி மலை மேல் சுவாமிகளுக்கு குறிச்சி அலங்காரம் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com