சரக்கு வேன் கவிழ்ந்ததில் 14 பேர் காயம்

மேட்டூர் அருகே சரக்கு வேன் கவிழ்ந்த விபத்தில் 14 பேர் காயம் அடைந்தனர்.

மேட்டூர் அருகே சரக்கு வேன் கவிழ்ந்த விபத்தில் 14 பேர் காயம் அடைந்தனர்.
கர்நாடக மாநிலம், செங்கப்பாடியிலிருந்து சேலம் மாவட்டம், எடப்பாடிக்கு  விருந்துக்கு சரக்கு ஆட்டோவில் 30-க்கும் மேற்பட்டோர் வந்தனர். இவர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் விருந்து முடிந்து சரக்கு ஆட்டோவில் மீண்டும் செங்கப்பாடிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கொளத்தூர் அருகே உள்ள கருங்கல்லூர் அருகே சென்றபோது ஆட்டோவின் டயர் வெடித்தது. இதனால் நிலைதடுமாறிய ஆட்டோ சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 7 சிறியவர்கள்,  7 பெரியவர்கள் என 14 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மேட்டூர் மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கொளத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com