பெரியார் பல்கலைக்கழகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) பேராசிரியர் எஸ்.லீலா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், நிர்வாக அலுவலர்கள், மாணவ, மாணவியர் ஆகியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பெரியார் தொலைநிலைக் கல்வி நிறுவன இயக்குநர் பி.கே.புவனலதா, துணைப் பதிவாளர்கள் கே.ராமன், பி.கே.செந்தில்குமார், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.