மனைவியைக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை

மேட்டூர் அருகே மனைவியைக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது.

மேட்டூர் அருகே மனைவியைக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், கருமலைக்கூடல் அருகேயுள்ள ராமன்நகர் இரட்டைபுளியமரத்தூரைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி ராஜேஸ்வரி. இருவருக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. இதனிடையே கடந்த 2012 மார்ச் 16 ஆம் தேதி ஏற்பட்ட தகராறில் மனைவி ராஜேஸ்வரியை, தர்மராஜ் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்.
இதுதொடர்பாக கருமலைக்கூடல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தர்மராஜை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள 3 ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எழில், மனைவியைக் கொலை செய்த தர்மராஜுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
ஏற்காட்டில் அம்மா திட்ட முகாம்
ஏற்காடு, நவ. 10: சேலம் மாவட்டம், வெள்ளக்கடை ஊராட்சி பிலியூர் கிராமத்தில் அம்மா திட்டம் முகாம் மற்றும் கண் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஏற்காடு சமூக நலத்திட்ட வட்டாட்சியர் சண்முகவள்ளி தலைமை வகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் தேவி முன்னிலை வகித்தார். பொதுமக்களிடமிருந்து 6 மனுக்கள் பெறப்பட்டன. மேலும், மலைவாழ் மக்களுக்கு முகாமில் மருத்துவக் குழுவின் மூலம் கண் பரிசோதனை நடைபெற்றது. இதில் 48 பேர் பங்கேற்றனர். எட்டு பேர் தீவிர சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்டனர். முகாமில் வருவாய் அலுவலர் பிரகாஷ், கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com