மேட்டூர் அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, 600 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டுள்ளது.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட நான்கு யூனிட்டுகளும், 600 மெகாவாட் திறன்கொண்ட ஒரு யூனிட்டும் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும். திங்கள்கிழமை 600 மெகாவாட் திறன்கொண்ட பிரிவில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின் உற்பத்தி தடைபட்டுள்ளது. பழுது நீக்கும் பணியில் அனல் மின் நிலையப் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஓரிரு தினங்களில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று அனல் மின் நிலையப் பொறியாளர் தெரிவித்துள்ளார்.