ஆத்தூரில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஆத்தூரில் புதன்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஆத்தூரில் புதன்கிழமை நடைபெற்றது.
 ஆத்தூர் கடைவீதி அஞ்சல் நிலையம் முன் மாவட்டத் தலைவர் எஸ்.கே.அர்த்தனாரி தலைமையில் அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக பா.ஜ.க. தலைவர் அமித்ஷா மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்டப் பொருளாளர் ஆர்.ஓசுமணி வரவேற்றுப் பேசினார்.
 ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்டத் தலைவர் எம்.பெரியசாமி, முன்னாள் எம்எல்ஏக்கள் சி.பழனிமுத்து, எம்.ஆர்.சுந்தரம், மூத்த தலைவர் எஸ்.சித்தமலை, நரசிங்கபுரம் நகர மன்ற முன்னாள் தலைவர் எஸ்.சக்ரவர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர். நகரத் தலைவர் எல்.முருகேசன் நன்றி கூறினார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com