தம்மம்பட்டி சுவேத நதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது

தம்மம்பட்டி சுவேத நதியில் மூன்றாண்டுகளுக்கு பிறகு மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தம்மம்பட்டி சுவேத நதியில் மூன்றாண்டுகளுக்கு பிறகு மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
 நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை பகுதியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் புதன்கிழமை அதிகாலை வரை பலத்த மழை பெய்ததால், தம்மம்பட்டி சுவேத நதியில் செந்நிறத்தில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் தம்மம்பட்டி சுற்றுவட்டார மக்கள் மகிழ்ச்சி அடைந்து ஆற்றில் மலர்தூவினர். இதனால் சுற்றிலும் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com