ஆத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், பி.எப். பணத்தை வழங்கக் கோரி சனிக்கிழமை குடும்பத்தினருடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் பி.எப். பணத்தை உயர்நீதி மன்றம் வழங்கக் கூறியும், தர மறுக்கும் நிர்வாகத்தைக் கண்டித்து காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.