சேலத்தில் குப்பைகளை அள்ளி தூய்மைப் பணியில் ஈடுபட்ட ஆட்சியர்!

சேலம் மாநகரின் பல்வேறு பகுதியில் மாணவர்களை கொண்டு தூய்மைப்படுத்தும் பணியைத் தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ், குப்பைகளை அள்ளி தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.

சேலம் மாநகரின் பல்வேறு பகுதியில் மாணவர்களை கொண்டு தூய்மைப்படுத்தும் பணியைத் தொடக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ், குப்பைகளை அள்ளி தூய்மைப் பணியில் ஈடுபட்டார்.
தூய்மையே சேவை இயக்கம் சேலம் மாவட்டத்தில் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக பள்ளி சாரண, சாரணிய மாணவர்களை கொண்டு மாநகரின் முக்கியமான இடங்களைச் சுத்தம் செய்யும் பணி சனிக்கிழமை தொடங்கப்பட்டது.
பழைய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற தூய்மைப்படுத்தும் பணியைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ், கையுறைகளை மாட்டிக்கொண்டு, சாலையில் இறங்கி சாலையோரத்தில் தேங்கியிருந்த குப்பைகளை அள்ளி வாகனத்தில் கொட்டினார்.
இதைப் பார்த்த பள்ளி மாணவர்களும் கூச்சப்படாமல் குப்பைகளை அள்ளி தூய்மைப்படுத்தும் பணியைத் தொடங்கினர். இதேபோல சேலம் மாநகர் பகுதியில் போஸ் மைதானம், அருங்காட்சியகம், மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளிலும் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com