சங்ககிரி ரோட்டரி கிளப் சார்பில் உலக தாய்பால் வார விழா சங்ககிரி தலைமை அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
ரோட்டரி கிளப் தலைவர் எஸ்.செந்தில்குமார் தலைமை வகித்தார். அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். அரசு மருத்துவர் ராணிவித்யா தாய்ப்பால் குழந்தைகளுக்கு புகட்டுவதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினார்.
ரோட்டரி கிளப் செயலர் ஜெ.நந்தகுமார், பொருளாளர் எஸ்.துரைசாமி, முன்னாள் தலைவர்கள் கே.ராசாமி, எஸ்.ராமசாமி, நிர்வாகிகள் ராஜா, கார்த்திகேயன், இன்னர்வீல் தலைவி விஜயலட்சுமி, நிர்வாகிகள் சரஸ்வதி, ராஜம்மாள், ஞானம், குணசுந்தரி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். 22 கர்ப்பிணிகளுக்கு சத்துமாவு, பேரிச்சம் பழம், நெல்லிக்காய் உள்ளிட்ட பல்வேறு சத்தான பொருள்கள் வழங்கப்பட்டன.