ஆத்தூர் பெரியமாரியம்மன் திருக்கோயிலில் ஆடிக் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அலங்காரம், பூஜை நடைபெற்றது.
ஆத்தூர் பெரியமாரியம்மன் கோயிலில் ஆடிக்கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு யாகம், அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. பின்னர் பூவாடைக்காரி அம்மன் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கூழ், மாவு வழங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.