அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் சாவு

ஆத்தூரை அடுத்த அம்மம்பாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற முதியவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.


ஆத்தூரை அடுத்த அம்மம்பாளையத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற முதியவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
ஆத்தூரை அடுத்த அம்மம்பாளையம் காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (57). கூலித் தொழிலாளி. இவரது மனைவி மணி 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால், பழனிசாமி தனது மகள் வனிதா வீட்டில் வசித்து வந்தார். மேலும் ஆத்தூரில் மூட்டை தூக்கும் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சனிக்கிழமை அதிகாலை வீட்டில் இருந்து வெளியே வந்தவர் ஆத்தூர் செல்வதற்கு பேருந்தை பிடிப்பதற்காக அங்குள்ள சாலையைக் கடக்க முயன்றார். அப்போது சேலத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பழனிசாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் ஊரக காவல் ஆய்வாளர் ஆர்.சரவணன், உயிரிழந்த பழனிசாமியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com